மாலே மணிவண்ணா மார்கழி நீராடுவன்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து உன் பாஞ்சஜன்யமே
போல்வன சங்கங்கள் போய்ப்பாடுடையனவே
சாலப்பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலின் இலையாய் அருளேலோ ரெம்பாவாய்.
மாலே மணிவண்ணா பாசுரத்தின் ஈற்றடியில் ஆலினிலையாய் அருளென்றிருப்பதை நோக்கியது இம்மாலை குறிப்பு.
யசோதை பிராட்டி கண்ணனை ஆலிலைத்துயின்ற குழவியாகவே அடிக்கடி சொல்லுவாள்.
அம்புலியை அழைக்குமிடத்து "பாலகனென்று பரிபவம் செய்யேல், பண்டொருநாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கனவனிவன்" என்றாள்.
செங்கீரை ஆட வேண்டும்போது "உய்ய உலகு படைத்துண்ட மணிவயிறா.....ஆலினிலை அதன் மேல் பையவுயொகு துயில் கொண்ட பரம்பரனே" என்றாள்.
அக்காக்காய் நம்பிக்கு கோல் கொண்டு வாவென்னும்பொது "ஆலத்திலயானரவின் ஆணை மேலான்" என்றாள்.
பூச்சூட வாராய் என்றழைக்கும் போது "உண்டிட்டு உலகினை ஏழும் ஒராலிலையில் துயில்கொண்டாய்"என்றாள்.
இங்ஙனே அபரிமிதம்.
எம்பெருமானுடைய அற்புதமான செயல்களில் "ஞாலமேழும் உண்டு ஆலமரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய் துயின்ற செயலுக்கு ஈடானது எதுவுமில்லை. ஒரு பெரிய பாசுரம் இட்டு அருளி இக்கதையை பரம போக்யமாக பேசினவர் நம்மாழ்வார் ஒருவரே, திருவாசிரியத்தின் நிகம பாசுரம்
"நளிர்மதி சடையனும், நான் முகக்கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனு முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீ கால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும் அகப்பட கரந்து
ஒராலிலைச்சேர்ந்த எம்பெருமா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே."
என்று வெகு அற்புதமாக அமைந்துள்ளது.
"நளிர்மதி சடையனும், நான் முகக்கடவுளும்
தளிரொளி இமையவர் தலைவனு முதலா
யாவகை உலகமும் யாவரும் அகப்பட
நிலநீர் தீ கால் சுடரிரு விசும்பும்
மலர்சுடர் பிறவும் சிறிதுடன் மயங்க
ஒரு பொருள் புறப்பாடின்றி முழுவதும் அகப்பட கரந்து
ஒராலிலைச்சேர்ந்த எம்பெருமா மாயனை அல்லது
ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே."
என்று வெகு அற்புதமாக அமைந்துள்ளது.
இதை சிறிது விவரித்து அனுபவிப்போம் இங்கு. "நளிர் மதி சடயனென்னும் இப்பாட்டின் கீழ்பாட்டில் ஆழ்வார்க்கு ஒரு பெரிய துயரமுண்டாயிற்று. (அதாவது) சகல சேதனர்களும் ப்ராப்த சேஷியான எம்பெருமானை அடி பணிந்து அவனுக்கே வழுவிலாவடிமை செய்ய ப்ராப்தமாய் இருக்க அது செய்யாதே தேவதாந்தரங்களை பஜிப்பதும் ஜீவஹிம்ச ரூபமான கொடிய காரியங்களாலே அந்த க்ஷுத்ர தெய்வங்களை ஆராதிப்பதுமாய் இருந்து சம்சாரத்தையே பூண் கட்டி கொள்ளுகிறார்களே! அந்தோ! இது என்ன அநீதி! என்று துயருற்றார். ஒரு சம்சாரியும் ஆழ்வாருடைய துயரத்தை பரிஹரிக்க முன் வராமல் போகவே இப்பாழும் சம்சாரிகள் எக்கேடாவது கெடட்டும்; நாமும் இவர்களை போலே அனர்த்தப்பட்டு போகாமே எம்பெருமானுக்கே அடிமைப்பட்டு இருக்க பெற்றோமே என்று உகந்து அவ்வுகப்பை வெளியிடுகிறார் இப்பாட்டில்.
சம்சாரிகள் பஜிக்கிற பிற தெய்வங்கள் யாவும் நம்மை போலவே பலவகை ஆபத்துகளுக்கு உள்ளாகி எம்பெருமானுடைய திருவருளால் தப்பி பிழைப்பவர்களே ஒழியே தங்களுடைய ஆபத்துக்களை தாங்களே பரிஹரித்து கொள்ளவோ பிறருடைய ஆபத்துக்களை தாங்கள் பரிஹரிக்கவோ ஆற்றல் உடையவர்கள் அல்லர் என்பதை விளக்க வேண்டி இந்த தெய்வங்கள் எல்லாம் பிரளய காலத்தில் எம்பெருமான் திருவயிற்றிலே ஒடுங்கிக்கிடந்து ரக்ஷை பெற்றவை காண், ஆகா ஆலினிலையான் இதிகாசம் கையிலங்கு நெல்லிக்கனி யாக விளக்க இந்த பாசுரம் அமைந்தது.
சௌ.வை.ராமன்
ஜனவரி 9, 2013
No comments:
Post a Comment